• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணி காரணமாக கோவை-நாகர்கோவில் இடையே ரயில் ரத்து

February 20, 2021 தண்டோரா குழு

இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணி காரணமாக கோவை-நாகர்கோவில் இடையே ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவில்பட்டி-கடம்பூர் இடையே இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதன்படி நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு கோவைக்கு இயக்கப்படும் ரயில் வரும் 24-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக இந்த ரயில் மதுரையில் இருந்து கோவை வரை இயக்கப்படும். மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படாது.

இதேபோல் கோவையில் இருந்து காலை 8 மணிக்கு நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில் வரும் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து மதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.இதேபோல் நாகர்கோவிலில் இருந்து இரவு 9.45 மணிக்கு கோவைக்கு புறப்படும் ரயில் வரும் 26-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரை-கோவை இடையே வழக்கம்போல் இயக்கப்படும்.

மேலும் கோவையில் இருந்து தினமும் இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டு செல்லும் ரயில் வரும் 25-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 3 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கோவை-மதுரை இடையே வழக்கம்போல் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க