• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரட்டை இலை வழக்கு விசாரணை: நவ., 6க்கு ஒத்திவைப்பு

November 1, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கின் விசாரணை நவ.6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா அணி, பன்னீர் அணி என அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.

இதற்கிடையில், முதல்வர் பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்தது.அதன்பின்,’இரட்டை இலை சின்னத்தை, தங்கள் அணிக்கு தர வேண்டும்’ என தேர்தல் கமிஷனில் கோரிக்கை வைத்து புதிய பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்குப் போட்டியாக தினகரன் அணியினரும் தங்களுக்கே சின்னம் ஒதுக்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணை டில்லியில் உள்ள, தேர்தல் கமிஷனில் கடந்த அக்., 6; அக்., 13; அக்., 23ல் என மூன்று கட்டங்களாக நடந்தது. பின்னர் வழக்கு விசாரணை நவ.1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை டெல்லியில் இன்று நடைபெற்றது. ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது தரப்பில் விளக்கங்களை அளித்து வாதாடினார்கள். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணை மாலை 6 மணிவரை நீடித்தது.

பின்னர், தினகரன் தரப்பு தங்களது வாதத்தை நவ. 6-ம் தேதி நிறைவு செய்வதாக உறுதியளித்தது. இதையடுத்து விசாரணை மீண்டும் நவ. 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஐந்தாவது முறையாக இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க