• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரட்டை இலை சின்னம் யாருக்கு ?

March 22, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம், வியாழக்கிழமை அறிவிக்கும் என தகவல்.

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் தேர்தல் ஆணையத்தில் முன் தங்கள் தரப்பு வாதங்களை புதன்கிழமை நிறைவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஓ.பி.எஸ்., அணியை சார்ந்த ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறுகையில்

“சட்டவிதிகளின்படி தேர்தல் சின்னமானது வேட்பாளர்களுக்கு பொது செயலாளரால் மட்டுமே கொடுக்க முடியம். பொது செயலாளர் இல்லாத போது அவைத்தலைவர் மதுசூதனனுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. சசிகலாவுக்கும் தினகரனுக்கும் அதிகாரம் கிடையாது “என்றார் அவர்.

மேலும் அடிப்படை உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஓ.பி.எஸ்-சுக்கு ஆதரவாக உள்ளனர் என்று தெரிவித்தார். இரு தரப்பினருமே தங்கள் தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையம் முன் வைத்துள்ளோம். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தங்களுக்கே இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம், வியாழக்கிழமை அறிவிக்கும் என சசிகலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் படிக்க