• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் ராஜமௌலி மீது காவல்நிலையத்தில் புகார்!

May 2, 2017 தண்டோரா குழு

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி மீது குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள், படத்தில் தங்கள் சாதியை அவர் இழிவுப்படுத்தி விட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பிரமாண்டமான படமான பாகுபலியை படத்தை இயக்கியவர் இயக்குநர் ராஜமௌலி, இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 2 படம் 4 நாட்களில் 600கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இவர்மீது அரீகதிகா பொரடா சமிதி வாழ் உறுப்பினர்கள் பஞ்சாராஹில்ஸ்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில், ராஜமௌலி எங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களை திரைப்படத்தில் தவறாகச் சித்திரித்துள்ளார். பாகுபலி 2 படத்தில் நடிகர் சத்யராஜ்ஓர் இடத்தில் ‘கதிகா சீக்கட்டி’ என்று சொல்வார். இது எங்கள் சமூகத்தில் உள்ளவர்களைப் புண்படுத்துவதாக உள்ளது. அது மட்டுமின்றி இது எங்கள் சாதியை ஒடுக்குவதற்குச் சமம்.

நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியாக கால்நடைகளை விற்பனை செய்வது சத்தான உணவை உண்பதற்காகவே.அது இன்றி திரைப்படத்தில் கூறியிருப்பது போல் நாங்கள் மனிதாபிமான மற்ற சமுகவிரோதிகள் இல்லை.

அதனால், சென்சார் போர்டு உடனடியாக கதிகா என்ற வார்த்தையைப் படத்திலிருந்து நீக்க வேண்டும், என்று பபுகார் மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க