• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தோனேசியாவைச் சேர்ந்த 146 வயது முதியவர் மரணம்

May 2, 2017 தண்டோரா குழு

உலகிலேயே அதிக வயதுடையவர் என்று கருதப்படும் இந்தோனேசியாவை சேர்ந்த 146 வயது சொடிமெஜோ என்பவர் மரணமடைந்தார்.

சொடிமெஜோ 1870-ம் ஆண்டு பிறந்தவர் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இவர் இந்தோனேசியாவில் உள்ள மத்திய ஜாவாவின் சோலோ என்னும் பகுதியில் வசித்து வந்தார்.

இந்தோனேசியாவில் 19௦௦-ம் ஆண்டு தான் பிறப்பு பதிவு நடைபெற தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் சொடிமெஜோ சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் அவருடைய வயது 146 என்பது உண்மையானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொடிமெஜோ ஏப்ரல் 12-ம் தேதி உடல் நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆறு நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய அவர் சற்று சோர்வாகவே காணப்பட்டார்.

சொடிமெஜோவின் பேரன் சுயண்டோ கூறுகையில்,

வீடு திரும்பிய அவர், கடந்த இரண்டு நாட்களாக சிறிது கஞ்சி சாப்பிட்டு, கொஞ்சம் தண்ணீர் குடித்தார். அதன் பிறகு, தனது மரண நேரம் வரை ஒன்றும் சாப்பிடவோ குடிக்கவோ விரும்பவில்லை.அவர் மரணத்திற்கு முன், யாரிடமும் அதிகம் பேசவில்லை. குடும்பத்தினர் மட்டும் அவர் அருகில் இருக்க விரும்பினார்.

சொடிமெஜோ அவருடைய மனைவி, உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள் என அனைவரையும் விட அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க