• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய வம்சாவளியினருக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயரிய விருது

January 27, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவின் தேசிய தினம் வியாழக்கிழமைஸ (ஜன 26) கொண்டாடப்பட்டது. இந்நிலையில்
ஆஸ்திரேலியாவின் கவுரம் மிக்க 2017-ம் ஆண்டுக்கான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.

மருத்துவத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக சிட்னியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் புருஷோத்தம் சவரிகர், நரம்பியல் கதிர்வீச்சு, கல்வித் துறை மற்றும் மருத்துவம் சார்ந்த பிறதுறைகளில் சிறப்பாக சேவை செய்துள்ளதற்காக மக்கான் சிங், அணு மருத்துவ நிபுணரும், சிட்னிநகர தமிழ்ச் சங்கத் தலைவருமான விஜயகுமார் ஆகிய மூவருக்கும் அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருது அளிக்கப்பட்டது.

விஜயகுமார் கடந்த 2007 மற்றும் 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணுசக்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதினைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் “ஹீரோ ஆஃப் தி இயர்” விருதுக்கு தேஜிந்தர் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் டார்வின் மக்களுக்கு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்கள் மூலம் இலவசமாக உணவு வழங்கி வருகிறார். அதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க