இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் இந்தியா ரஷ்யா தொழில் மேம்பாடு குறித்தும் கோவை தொழில்துறையினரின் உற்பத்தி பொருள்கள் ரஷ்யா ஏற்றுமதி செய்வது குறித்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு தலைமையில் நடைபெற்றது
இந்தியா ரஷ்யா தொழில் வர்த்தக சபையின் துணைத் தலைவர் ஜெம் வீரமணி முன்னிலை வைத்தார்.இந்திய தொழில் வர்த்தக சபையின் துணைத் தலைவர் சுந்தரம் செயலாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் வர்த்தக சபை தலைவர் பேசும்போது,
கோவை தொழிலதிபர்கள் இங்கு உள்ள உற்பத்தி பொருட்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ரஷ்யாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்கும் உரிய ஆலோசனை பெற வேண்டி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் கோவை ரஷ்யா இடையே வர்த்தகம் பெறும் வாய்ப்பை நாம் பெறலாம் என்று கூறினார்.
தென்னிந்தியாவின் ரஷ்யா துணை தூதர் ஓலக் அவுதீயூ பேசுகையில்,
இந்தியா ரஷ்யா தொழில் கூட்டமை ஒப்பந்தப்படி ரஷ்யாவில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதே போல் இந்தியாவில் இருந்து டீ காபி பெட்ரோலிய பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்த தொழில் வர்த்தகத்தில் சில இடர்பாடுகள் உள்ளன போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பொருள்களுக்கான பண பரிமாற்றத்தில் இவற்றில் உள்ள சிக்கல்களை களைய பேச்சுவார்த்தையின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை அருகே கடல்வழி பயணம் புதிதாக ஒரு முனையத்தை ஏற்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த துறைமுகம் செயல்பாட்டிற்கு வந்தால் செலவினங்கள் குறைந்து ஏற்றுமதி இறக்குமதி வேகமாக நடைபெறும்இந்திய தொழில் முன்னேற்றம் அடையும்.கோவை தொழிலதிபர்களின் உற்பத்தி பொருள்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எந்தெந்த வகையில் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.
ரஷ்யா இந்தியா தொழில் வர்த்தக சபை பொதுசெயலர் தங்கப்பன் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள் பேரலாக பங்கேற்றனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்