• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் சீல்

October 7, 2016 தண்டோரா குழு

இந்தியா பாகிஸ்தான் இடையில் போர் பதட்டம் நீடிப்பதை தொடர்ந்து இந்திய- பாக் எல்லை சீல் வைத்து கண்காணிக்கப்படும் என ராஜஸ்தானில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

யூரி மற்றும் சர்ஜிக்கல் தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில முதல்வர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பிற்கு சமரசம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. நாட்டின் பாதுகாப்பு படைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தான் நாட்டுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த எல்லையையும் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சீல் வைக்கப்படும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க