• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் பாம்பு கடியால் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல்

December 28, 2019

இந்தியாவில் பாம்பு கடியால் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் பேர் உயிரிழப்பதாக இங்கிலாந்து பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சக்திவேல் தெரிவித்தார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் யுனிவர்சிட்டி ஆப் ரீடிங் உதவி பேராசிரியர் சக்திவேல் வையாபுரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடியால் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் 1.5 மில்லியன் பேர் உயரிழப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் 10,000 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்கள் என்றார்.

மேலும், பாம்பு கடி குறித்து போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே இல்லாததே அதிக உயிரிழப்பிற்கு காரணம். உலகளவில் 3000 வகையான பாம்புகள் உள்ளது.600 பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை கொண்டது.
இந்தியாவில் 200 வகையான பாம்புகள் இருக்கிறது. அதில் கண்ணாடி விரியன், நல்லபாம்பு,
கட்டுவிரியன், சுருட்டை விரியன் பாம்புகள் கொடிய விஷம் கொண்டது எனவும் மற்ற வகை பாம்புகளால் அதிக அளவில் பாதிப்பு இருக்காது
மேலும், பாம்பு கடித்த இரண்டு மணி நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என கூறியவர், இது குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை எனவும் முறையான சிகிச்சை அளிப்பதன் மூலமே உயிரிழப்பு மற்றும் நிரந்தர குறைபாடுகளை தவிர்க்க முடியும் என்றார். பாம்பு கடியை தவிர்க்க மக்கள் செய்ய வேண்டியவற்றை குறித்து கூறியவர், மழை காலங்களில் அதிக அளவில் உணவு தேடி வெளியே வரும் எனவும் எலிகள் இருக்கும் பகுதியில் பாம்புகள் அதிகம் இருக்கும் என்றும் மனித நடமாட்டத்தை அதிர்வுகள் மூலம் தெரிந்து கொள்வதாகவும் அதை அறியாமல் மிதித்து விட்டாலோ அதற்கு பாதிப்பு ஏற்படும்போது பாம்புகள் மனிதனை கடிப்பதாக கூறினார்.

இந்தியாவில் அதிக அளவில் விவசாயம் பயிரிடப்படுவதாகவும் பாம்புகள் விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதுடன் விவசாய நிலங்களை காப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக தெரிவித்தார். சாரை பாம்புகள் தனது வாழ்நாளில் 6000 பாம்புகளை உண்பதாக கூறிய அவர், 2010 ஆய்வின்படி தமிழகத்தில் ஆண்டுக்கு 10,000 பேர் இறந்து உள்ளதாகவும் இது சாலை விபத்துக்கு ஈடானது என்றவர், பாம்பு கடியால் இறப்பவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் இல்லை என்றார். விஷமில்லாத பாம்புகளால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனினும் விஷம் கொண்ட பாம்பு கடிக்கு விஷ முறிவு மருந்தினை எடுத்து கொண்டு சிகிச்சை மேற்கொள்வதே உயிரிழப்புகளை தவிர்க்க வழிவகை செய்யும் என்றார்.

மேலும், பாம்புகள் குறித்து பள்ளி பருவத்திலேயே அறிந்து கொள்ளும் வகையில் பாட புத்தகத்தில் இரண்டு பக்கங்கள் சேர்க்க அரசு முன்வர வேண்டும் எனவும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பாம்பு கடிக்கு வழங்கப்படும் தொகை போதுமான அளவு இல்லாததால் அதனை இத்திட்டத்தில் முற்றிலும் இலவசமாக வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். எந்த வகையான பாம்பு கடி என்பது தற்போது வரை கண்டறிய போதிய உபகரணங்கள் இல்லை என்றவர், இதனை கண்டுபிடிக்க புதிய கருவியை உருவாக்கி வருவதாகவும் அடுத்த ஆண்டு குறைந்த விலையில் கிடைக்கப் பெறும் என்றார். இந்த கருவி மூலம் எந்த வகை பாம்பு கடித்துள்ளது ஒரு சொட்டு ரத்தத்தின் மூலம் அதன் விஷத்தன்மை ஆகியன அறிந்து சிகிச்சை அளிக்கும் போது உயிரிழப்புகளை குறைக்க முடியும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க