• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை-அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

March 21, 2017 தண்டோரா குழு

இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சுமார் 6 கோடி மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்று பன்னாட்டு சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இது குறித்து சர்வதேச ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“இந்தியாவில் கிராமப்புற மற்றும் ஊரக பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு பெரும்பாலும் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. சுமார் 6 கோடி மக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்கையில் மக்கள் தொகை பெருக்கம், வறட்சி, அரசு திட்டங்கள் முறையாக செயல்படுத்துவதில்லை, சுத்திகரிப்பு செய்யப்படும் தண்ணீரை வீணாக்குதல், விவசாயம் மற்றும் வீட்டுக்கு உபயோகம் படுத்தும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யாமல் வீணாக்குதல் போன்றவை காரணங்களாக கருதப்படுகின்றன.

தண்ணீர் சுத்தமாக இல்லாத காரணத்தினால் கொசுக்கள் உற்பத்தியாகி காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவுகின்றன.”இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தண்ணீர் ஆராய்சியாளர் ஒருவர் கூறுகையில்

”மழை தண்ணீரை சேமிக்காமல் நாம் வீணாக்குகிறோம்.நிலத்தடி தண்ணீரை சேமிக்க தகுந்த வழிமுறையை கையாள வேண்டும்.குளம்,எரி,குட்டைகளை தூர் வாரி தண்ணீரை சேமிக்க வேண்டும்.” என்றார்.

மேலும் படிக்க