• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை உயர்வு

January 31, 2019

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் அதிகரித்துள்ளதாக, தேசிய மாதிரி புள்ளியியல் ஆய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட மத்திய அரசு தாமதப்படுத்துவதாக கூறி, தேசிய புள்ளிவிவர ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து, பி.சி.மோகனன், ஜே.வி.மீனாட்சி ஆகியோர் பதவி விலகிய நிலையில், Business Standard செய்தி நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017-2018-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1972-ஆம் ஆண்டு மட்டுமே இதே போல 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவியது.

தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, 2017-18-ஆம் நிதியாண்டில் நகரங்களில் வேலையில்லாத ஆண்களின் விகிதம் 18.7 சதவிகிதமாகவும், பெண்களின் விகிதம் 27.2 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலையில்லாத ஆண்களின் விகிதம் 17.4 சதவிகிதமாகவும், பெண்களின் விகிதம் 13.6 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பின் மேற்கொள்ளப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ ஆய்வில், வேலைவாய்ப்பின்மை உயர்ந்தது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எனப்படும் அமைப்பு, கடந்த ஆண்டில் ஒரு கோடியே பத்து இலட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க