• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் 5 kg LPG சிலிண்டர், வணிகமுறை இஸ்திரி பெட்டி அறிமுகம்

August 29, 2018 தண்டோரா குழு

கோவை தனியார் ஹோட்டலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் 5 கிலோ LPG சிலிண்டர் மற்றும் வணிகமுறை இஸ்திரி பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சித்தார்தன்இவ்விழாவில் கலந்து கொண்டு5 கிலோ LPG சிலிண்டர் மற்றும் இஸ்திரி பெட்டியை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது பேசிய அவர்,

இந்த 5 கிலோ சிலிண்டர் மற்றும் இஸ்திரி பெட்டி வணிக ரீதியாக தொழில் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிசதமாக அமையும். இதனால் நேரம் மிச்சமாவதுடன்,பொருளாதார ரீதியாகவும் பலன் கிடைக்கும். 5கிலோ எரிவாயு சிலிண்டர் இஸ்திரி தொழிலுக்கு மட்டும் அல்லாமல் சுற்றுலா செல்பவர்களுக்கும்,வெளியூர் செல்பவர்களுக்கும்,லாரி ஓட்டுநர்களுக்கும் சமையல் செய்வதற்கும் உபயோகமாக இருக்கும் என தெரிவித்தார்.மேலும் பயன்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விழாவில் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்தி தொழில்முறை இஸ்திரி பணியை மேற்கொள்வது பற்றிய செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்வில் இந்தியன் ஆயில் பொது மேலாளர் சௌகான்,கோவை விநியோகஸ்தர் சங்க தலைவர் நாகராஜ்,தென்மண்டல கார்பரேட் பொது மேலாளர் சபீதா நடராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க