• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியக் கடற்படைக் கப்பலில் சிறிய தீ விபத்து

January 11, 2017 தண்டோரா குழு

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் பிரளயா என்னும் போர்க் கப்பலில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 1௦) சிறிய தீ விபத்து ஏற்பட்டது. எனினும், உயிர்ச் சேதம் ஏதும் இல்லை.

இச்சம்பவம் குறித்து இந்திய கடற்படையின் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

“இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் பிரளயா போர்க் கப்பல் மும்பை கப்பல் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலின் ஒரு பகுதியில் தீடீரென்று தீ பிடித்தது. உடனே, கப்பல் தீய|ணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. வெல்டிங் பணி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்றார்.

கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி, 3,800 டன் எடையுடைய “பிரம்மபுத்ரா ஐஎனஎஸ் பெட்வா” என்னும் போர்க் கப்பல், அதே கப்பல் துறையில் இருந்து வெளியே வரும்போது வழுக்கி அருகிலிருந்த காய்ந்த பகுதியில் சாய்ந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு மாலுமிகள் உயிரிழந்தனர். 14 காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க