• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இண்டெர்போல் தலைவர் மெங் ஹாங்வே சீனாவுக்கு சென்ற போது மாயம்

October 5, 2018 தண்டோரா குழு

சீனாவில் மாயமான இண்டர்போல் தலைவரை பிரான்ஸ் போலீசார்தேடி வருகின்றனர்.

சர்வதேச அளவில் நடைபெறும் விசாரணைகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இன்டர்போல் (Interpol) அமைப்பின் தலைவராக சீனாவைச் சேர்ந்த மெங், 2016-ம் ஆண்டு நவம்பரில் தேர்வு செய்யப்பட்டார். சீனாவில் துணை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இண்டர்போல் தலைவராக இருப்பதன் காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் சொந்த நாடு சென்ற அவரை, செப்.,29 முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இதையடுத்து,இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாகப் பிரான்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இது குறித்து கருத்து தெரிவிக்க இண்டர்போல் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

கடந்த 2016 ல் இண்டர்போல் தலைவராக தேர்வான மெங் ஹோங்வெயி பதவிக்காலம் 2020வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க