• Download mobile app
09 Jul 2025, WednesdayEdition - 3437
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இணையதள சேவை, பால், தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்

May 25, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தினால் நான்காவது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பால்,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவச பொருட்கள் கிடைக்காமல் பேருந்து வசதிகளும் இல்லாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்தி வந்த போராட்டம் கடந்து மூன்று நாட்களாக உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.போலீசின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர் மேலும் தொடரும் கலவரத்தால் காவல்துறையினருக்கு பயந்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.

துத்துக்குடியில் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடைகள் மூடிக்கிடப்பதால் பால், தண்ணீர்,காய்கறிகள் போன்ற அத்தியாவசப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.மேலும் தூத்துக்குடியில் மின்சாரம் மற்றும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க