• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணையதள சேவை, பால், தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்

May 25, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தினால் நான்காவது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பால்,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவச பொருட்கள் கிடைக்காமல் பேருந்து வசதிகளும் இல்லாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்தி வந்த போராட்டம் கடந்து மூன்று நாட்களாக உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.போலீசின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர் மேலும் தொடரும் கலவரத்தால் காவல்துறையினருக்கு பயந்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.

துத்துக்குடியில் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடைகள் மூடிக்கிடப்பதால் பால், தண்ணீர்,காய்கறிகள் போன்ற அத்தியாவசப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.மேலும் தூத்துக்குடியில் மின்சாரம் மற்றும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க