இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்கள் மீதான வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்ச்செல்வன்,
“தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம். எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நான் மட்டும் மேல்முறையீடு செய்யமாட்டேன்.நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க முடியவில்லை.கட்சி தாவல் அடிப்படையில் எங்களை தகுதிநீக்கம் செய்யவில்லை.தீர்ப்பு சாதகமாக வந்தால் மதியமே சட்டப்பேரவைக்கு செல்வோம். இடைத்தேர்தல் வந்தால் சந்தித்து 18 பேரும் மீண்டும் வெற்றி பெறுவோம்.
மேலும்,இடைத்தேர்தலில் 18 பேரில் ஒருவர் வெற்றிபெறாவிட்டாலும் மற்ற 17 பேரும் ராஜினாமா செய்வோம் அந்த அளவிற்கு ஒற்றுமையாக உள்ளோம்”.இவ்வாறு கூறினார்.
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்