• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இடைதேர்தலில் தோல்விக்கான காரணம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம்

March 14, 2018 தண்டோரா குழு

சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் என முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கமளித்துள்ளார்.

உ.பி.யில் கோராக்பூர், புல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர் , மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு லோக்சபா தொகுதிகளுக்கும், பீகாரில் அரேரியா லோக்சபா தொகுதி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும் பீகாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இதில், புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது.

இந்த தோல்வி குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், 

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறேன். தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வோம். உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தியே மக்கள் ஓட்டளித்தனர். சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க