• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடதுசாரி வேட்பாளர்கள் ஒரு வேட்பாளர் 50 வேட்பாளர்களுக்கு சமம் – இயக்குநர் ராஜூ முருகன்

April 13, 2019 தண்டோரா குழு

இடதுசாரிகள் போட்டியிடும் 4 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் தெரிவித்தார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

காம்ரேட் டாக்கீஸ் என்ற பெயரில் யூ-டியூப் சேனல் மூலமாக கலைதளமாக செயல்படுகின்றோம். சினிமாவில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது என்பதால், அறம் சார்ந்த அரசியலை பேசுவதற்காக இந்த சேனலை தொடங்கி செயல்படுகின்றோம். இசை கலைஞர், நாடகக் கலைஞர், நடிகர்களை ஒன்றிணைத்து இதை தொடங்கி இருக்கின்றோம்.துணிந்து சொல் என்ற பெயரில் பிரச்சாரப் பாடலையும், காவல்காரன் என்ற பெயரில் குறும்படமும் இப்போது வெளியிடுகின்றோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவற்றை வெளியிடுகின்றோம். இன்று வெளியிடும் இந்த பாடலை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் மேவானி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் வெளியிட இருக்கின்றனர். சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 4 தொகுதிகளிலும் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்கின்றோம். இடதுசாரி வேட்பாளர்கள் அறம் சார்ந்து செயல்படக் கூடியவர்கள். ஒரு வேட்பாளர் 50 வேட்பாளர்களுக்கு சமம்.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றோம். இந்த 5 தொகுதிகளில் நேரடியாக பிரச்சாரத்தினை தொடங்கி இருக்கிறோம். உதயசூரியன் சின்னத்தை ஆதரிப்பதில் பிரச்சினை இருக்கின்றது. அதனால், உதயசூரியன் சின்னத்தினை ஆதரிக்கவில்லை.விடுதலை சிறுத்தை வேட்பாளர் ரவிக்குமார் மீது தனக்கு தனிப்பட்ட மரியாதை எப்போதும் உண்டு. இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்வதால், எதிர்வினைகள் நடக்கும் என தெரியும். அதை தாண்டி தங்களின் குரலை ஒலிப்பதுதான் கலைஞர்களின் வேலை. நான் இடதுசாரி இயக்கத்தை முன்நிறுத்துபவன் என்பதால், மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க விரும்பவில்லை. அதன் ஆழமான அரசியலையும் பேச விரும்பவில்லை, என தெரிவித்தார்.

மேலும் படிக்க