• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் – மு.க. ஸ்டாலின்

March 11, 2017 தண்டோரா குழு

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில், பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்று தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், “ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளகிறேன்.

இந்தத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ள சூழ்நிலையைப் பார்க்கிறோம். விரைவில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலிலும் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்க மக்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டாக இருக்கிறது” என்றார் ஸ்டாலின்.

மேலும் படிக்க