• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ஆளுமை மிக்க தலைவரை ஏற்று திமுகவில் இணைந்துள்ளேன்!” – தங்க தமிழ்ச்செல்வன்

June 28, 2019 தண்டோரா குழு

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தங்க தமிழ்ச் செல்வன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, விரைவில் அவர் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன்

மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு நல்ல திட்டங்களை தர முடியும் என்று தேர்தல் மூலம் தெரிந்துள்ளது.

கலைஞருக்கு பிறகு அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைவராக ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலின் அண்ணா சொன்னதை கடைபிடிப்பவர். தமிழக மக்களுக்காக ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார். மக்களவை தேர்தலில் பெரிய வெற்றியை திமுகவுக்கு மக்கள் கொடுத்துள்ளனர். ஒற்றை தலைமையில் உள்ள கட்சி தான் சிறப்பாக செயல்பட முடியும். ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் குழப்பம் உள்ளது. அதிமுகவை பா.ஜ., பின்னால் இருந்து இயக்கி வருகிறது. தன்மானத்தை விட்டு அதிமுகவில் இணைய விரும்பவில்லை. எனது உழைப்பை பார்த்து திமுகவில் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க