• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநர், முதலமைச்சர் வாகனங்கள் செல்லும்போது 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை நிறுத்தக்கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்

March 5, 2018 தண்டோரா குழு

ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் உள்ளிட்டோர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் உள்ளிட்டோர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நிறுத்தப்படும். சில நேரங்களில் நீண்டநேரமாக போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் சென்றபோது ஒருமணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக கூறி  வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு,ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் உள்ளிட்டோர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது.ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வரின் வாகனங்கள் செல்லும்போது போலீஸ் இதனை பின்பற்றுவார்கள் என நம்புகிறோம் .

மேலும், இந்த வழக்கில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க ஆணையிட முடியாது எனக்கூறி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்க