• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளுநர், முதலமைச்சர் வாகனங்கள் செல்லும்போது 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை நிறுத்தக்கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்

March 5, 2018 தண்டோரா குழு

ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் உள்ளிட்டோர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் உள்ளிட்டோர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நிறுத்தப்படும். சில நேரங்களில் நீண்டநேரமாக போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் சென்றபோது ஒருமணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக கூறி  வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு,ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் உள்ளிட்டோர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது.ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வரின் வாகனங்கள் செல்லும்போது போலீஸ் இதனை பின்பற்றுவார்கள் என நம்புகிறோம் .

மேலும், இந்த வழக்கில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க ஆணையிட முடியாது எனக்கூறி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்க