• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநர் மாளிகையில் அறிக்கை தாக்கல்

February 20, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்த அறிக்கையை சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் ஆளுநர் மாளிகையில் அளித்தார்.

கடந்த 18-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் உத்தரவின் பேரில் வீடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் அறிக்கையை தமிழக ஆளுநர் மாளிகையில் சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் திங்கட்கிழமை அளித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டப் பேரவையில் நடந்த சம்பவம் குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியே புகார் அளித்திருந்தனர். அது தொடர்பாக விரிவான வீடியோ பதிவு காட்சிகளுடன் அறிக்கை அளிக்குமாறு சட்டப் பேரவை செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு குறித்து ஆளுநரிடம் அளிக்கப்பட வேண்டிய அறிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் தனபால், பேரவைச்செயலாளர் ஜமாலுதீனுடன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அதன் பின் ஆவணங்கள் மற்றும் அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுக்க பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் ஆளுநர் மாளிகை சென்றார். ஆளுநர் மும்பையில் இருப்பதால் ஆளுநரின் முதன்மைச் செயலரிடம் பேரவை நடந்தவை தொடர்பான அறிக்கை அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க