• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி மாற்றம் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

March 18, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த பத்மஜாதேவி மாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரியான பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி காலியானது.

அந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதையடுத்து ஆர்.கே. நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பத்மஜாதேவி நியமனம் செய்யப்பட்டார்.

தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், பத்மஜாதேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீண் நாயர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க