• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.எஸ்.புரம் பகுதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

April 12, 2020 தண்டோரா குழு

கோவை ஆர்எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையிக் பொறுத்தவரையில் நேற்று வரை கொரோனா தொற்றால் 97 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்,கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.மேலும் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இவர்கள் கடந்த 24 ஆம் தேதி கோவை வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்போது நான்கு பேரையும் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஆர்.எஸ். புரம் பகுதியில் சுகாதார துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை குடியிருந்த அபார்ட்மெண்ட்லும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கோவையில் கொரோனா தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க