• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுத்த கலெக்டர் மாற்றம்!

August 17, 2017 தண்டோரா குழு

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் தேசியக்கொடி ஏற்ற அனுமதிமறுத்த கலெக்டர் பணியிடமாற்றம் செய்யபட்டுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் ,அரசு உதவி பெறும் கர்ணகி அம்மன் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரதிநிதிகள், பள்ளி ஊழியர்கள் மட்டும் தான் பள்ளியில் கொடியேற்ற வேண்டும். அமைப்புகள் தலைவர்கள் கொடியேற்றக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவிட்டிருந்தார்.இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், தடையை மீறி அப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றினார்.

இதற்கு பள்ளியில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேசியக்கொடி ஏற்றக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் தரப்பில் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இன்று மோகன் பகவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கலெக்டர் மேரி குட்டி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும், இது வழக்கமான பணியிட மாற்றம் தான் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க