• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆய்வின் போது முகக்கவசம் அணியாத 11 நபர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவு – மாநகராட்சி கமிஷனர் அதிரடி

May 6, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் உக்கடம் ராமர் கோயில் வீதியில் செயல்பட்டு வரும் காய்கறி சில்லரை விற்பனை மார்க்கெட்டில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் முஹமது கனிராவுத்தர் வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரியகடை வீதி, தியாகி குமரன் மார்க்கெட், ராஜ வீதி, கருப்பகவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகைக்கடைகள், ஷாப்பிங் கடைகள், அரிசிக்கடைகள், பேக்கரிகள் மொத்த மற்றும் சில்லரை வியாபாரக்கடைகளின் உரிமையாளர்களிடம் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர் அப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் இருந்த 11 நபர்களுக்கு தலா ரூ.200ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500ம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியம், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க