December 17, 2019
ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து கோவையில் வணிகர்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும் உடனடியாக அதனை தடை செய்ய மத்திர அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இதில் மாவட்ட தலைவர் இருதயராஜா முன்னிலை வகித்தார்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய சூலூர் சந்திரசேகரன்,
ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய அளவில் ஒட்டு மொத்த வணிகமும் பாதிக்கப்பட்டு வியாபாரம் சீர்குலைந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் தற்போது 37 சதவீதம் வரை சிறுவணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என நினைக்கக்கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகம் முடங்கி ஒட்டு மொத்தமாக வணிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சௌந்தர்ராஜன்,கணேசன், வேலுமயில் உட்பட பல்வேறு மகுதிகளை சேர்ந்த வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.