• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட திருத்தம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

November 5, 2020 தண்டோரா குழு

ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும், விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

நீலகிரி, திருப்பூரில் கொரோனா பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை விமான நிலையத்தில்
செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ,

கோவை மாவட்ட மக்கள் வைத்த
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக்
கொண்டு இருக்கிறது.உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடக்கின்றன
அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால பணிகள் ரூ.1100 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை காந்திரபுரத்தில் இரண்டுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் வகையில் விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்!”

மேலும் படிக்க