• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆனைமலை நல்லாறு திட்ட பணிகளை உடனே துவங்க வேண்டும் 1000 விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

September 27, 2022 தண்டோரா குழு

கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்ட பணிகளை உடனே துவங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு. பழனிச்சாமி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் கு.செல்லமுத்து கோரிக்கை விளக்கம் குறித்தான உரையை நிகழ்த்தினார்.

பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு. பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை தமிழக அரசு உடனே துவங்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன பகுதி கரையோர விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கிணற்றில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க கூடாது. பரம்பிக்குளம் பாசன திட்டத்திற்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு அநீதி இழைக்கக் கூடாது. தென்னைக்கு தான் சோதனை, விவசாயிக்கு தான் வேதனை, தேங்காய், மட்டை, காலி தொட்டிக்கும் விவசாயத்துக்கும் விலை இல்லை.

தண்ணீரை தவறாக பயன்படுத்தும் நபர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் நீர் திறப்பு பாசன கால்வாயை தவிர்த்து மற்ற பாசன கால்வாயில் உள்ள குளம், குட்டையை நீர் நிறப்ப ஆவணம் செய்ய வேண்டும். தற்போது பிஏபி பாசன நிலங்களில் பல நிலங்கள் தொழிற்சாலைகள் யாவும், காற்றாலைகளாகவும் மாறி உள்ளது. இந்த நிலங்களை பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலமாக மாற்ற வேண்டும்.

பாசன விவசாயிகள், தென்னை சார்பில் தொழில் புரியும் விவசாயிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தமிழக முதல்வர் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் துணை தலைவர் பெரியசாமி, சூலூர் எம்.எல்.ஏ. கந்தசாமி, பிஏபி கரையோர விவசாயிகள், கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், விவசாய கூட்டமைப்புகள், கொங்கு மண்டலம் மேற்கு பகுதி விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க