• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆந்திராவில் பேருந்து ஆற்றில் விழுந்து 8 பேர் பலி 3௦ பேர் படுகாயம்

February 28, 2017 தண்டோரா குழு

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா அருகே தனியார் பேருந்து பாலத்திலிருந்து நதியில் கவிழ்ந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 3௦ பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 10 பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த விபத்து விஜயவாடா அருகில் முள்ளப்பாடு என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) அதிகாலையில் நேர்ந்தது.

ஹைதராபாதிலிருந்து புவனேஸ்வரத்துக்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் 45 பேர் இருந்தனர். சுமார் 1௦௦௦ கிலோ மீட்டர் தொலைவு பயணித்த அந்த பேருந்து விஜயவாடாவில் சிறிது நேரம் நின்றுள்ளது. ஏற்கெனவே ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்குப் பதிலாக வேறு ஒரு புதிய ஓட்டுநர் பேருந்தை ஓட்டியுள்ளார். முள்ளப்பாடு என்னும் இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.3௦ மணியளவில் அந்தப் பேருந்து ஆற்றுப் பாலத்தில் வந்துகொண்டிருந்த போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டைத் திடீரென்று இழந்தது. உடனே, எதிர்பாராமல் பாலத்திலிருந்து கவிழ்ந்து நதியில் விழுந்தது.

இந்த விபத்தை பார்த்த நபர் உடனே காவல் துறையினருக்குத் தகவல் தந்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த 8 பேருடைய உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 3௦ பேரை நந்திகாமா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களில் 1௦ பேருடைய நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களின் நிலையை கண்காணிக்க கிருஷ்ணா மாவட்டத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தப் பேருந்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. ஜே.சி. பிரபாகர் ரெட்டி என்பவருக்குச் சொந்தமான வாகர் டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து ஆகும். அந்தப் பேருந்தை ஓட்டியவர் ஆதிநாராயணா என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டிய ஓட்டுநரின் கவனக்குறைவுதான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் சின்னா ராஜப்பா, மற்றும் சுகாதார அமைச்சர் காமினேனி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க