• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆந்திரப் பிரதேசத்தில் 6௦-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது

March 9, 2017 தண்டோரா குழு

ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, 6௦க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திர மாநில வனத்துறை மற்றும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் வைத்திருந்த ரூ.8 கோடி மதிப்பிலான 8 டன் செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்ததாகவும் ஆந்திர மாநில காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆந்திர மாநிலம் வனத்துறை பகுதியான கடப்பாவில் வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தபோது, வனப்பகுதிக்குள் 60க்கும் மேற்பட்டோர் மரம் வெட்டுவதைப் பார்த்து வனத்துறை அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரித்ததில் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது” என்றார்.

இச்சம்பவத்தால் மேலும் சிலர் வனப் பகுதிக்குள் பதுங்கியிருக்ககூடும் என்பதால் வனப் பகுதிக்குள் ஆந்திர வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க