• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்

July 16, 2021 தண்டோரா குழு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில்,பழங்குடியின மக்களின் குறைகள் கேட்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு தொழில் புரிய சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம், டிஜிட்டல் பிரிண்டிங் ஆகியவை மானியத்துடனான கடனுதவியும்,இலவச வீட்டுமனை பட்டாக்கள் என ரூ36.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

இந்த நிகழ்வில், அரசு முதன்மை செயலாளர் மணிவாசன்,ஆதிதிராவிடர் நல ஆணையர் மதுமதி,தாட்கோ மேலாண் இயக்குனர் விவேகானந்தன், பழங்குடியின நல இயக்குனர் ராகுல், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராம்குமார், காவல்துறை துணைத்தலைவர் முத்துச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க