• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டாலும் பான் கார்டு செல்லும்

June 30, 2017 தண்டோரா குழு

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30ம் தேதிக்கு பிறகும் செல்லுபடியாகும் என மத்திய நேரடி வரி விதிப்பு கழகம் இன்று அறிவித்துள்ளது.

வங்கி கணக்கு வைத்திருப்போர் மற்றும் வருமான வரி செலுத்தும் ஒவ்வொருவரும் ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் கூறி இருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைத்து வந்தனர்.

இந்நிலையில், ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்கப்படாவிட்டாலும் ஜூன் 30 க்கு பிறகு பான் கார்டுகள் செல்லும் என்று நேரடி வரி விதிப்பு கழகத்தின் தலைவர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.

மேலும்,குறிப்பிட்ட தேதி அறிவிக்கப்படும் அந்த தேதி வரையிலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க