• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுடன் இணைந்து மரக் கன்றுகளை நட்ட அதிகாரிகள்

March 8, 2022 தண்டோரா குழு

மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர்,காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுடன் இணைந்து மரக் கன்றுகளை நட்டனர்.

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் சமீரன்,மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா,மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நகரத்தினம்,வருவாய் அலுவலர் லீலா அலக்ஸ் ஆகியோர் ஆட்சியர் அலுவலக வளாத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வில்வமரம், மகிழமரம் உட்பட 5 வகை மரக்கன்றுகள் நடப்பட்டது.இதில் மாவடட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 50க்கும் மேற்ப்பட்ட மகளிர் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவடட் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர்,காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மகளிர் தினத்தில் மரக்கன்று நடும் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க