• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆடர் செய்தது ஐபோன், கிடைத்து துணி துவைக்கும் சோப் !

February 2, 2018 தண்டோரா குழு

ஆன்லைன் மூலம் ஐபோன் 8 மொபைல் போனுக்கு ஆர்டர் செய்த நபருக்கு துணி துவைக்கும் சோப் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஸ்டிர மாநிலம் நவி மும்பை அருகேயுள்ள பன்வலைச் சேர்ந்தவர் தேம்ராஜ் மெகபூர் நாக்ரலி (26) சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ’ஐபோன் 8’ செல்போன் வாங்க ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்டில், ஆர்டர் செய்துள்ளார்.தனது கார்டு மூலம் அந்த போனுக்கான ரூ.55 ஆயிரத்தைச் செலுத்தினார்.அடுத்த சில நாட்களுக்குப் பிறகு பிளிப்கார்டில் இருந்து அவரது  வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது.

ஆசைப்பட்ட ஐபோன் பார்க்க ஆசையாக பார்சலை பிரித்த நாக்ரலி அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், உள்ளே இருந்தது, ’ஐபோன் 8’ அல்ல. ’ஆக்டிவ் வீல்’ என்ற துணி துவைக்கும் சோப்பு தான்.இதனால், ஏமாற்றமடைந்த நாகரலிபிளிப்கார்ட் மீது பைகுல்லா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் படிக்க