• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன் சார்பில் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் !

September 4, 2025 தண்டோரா குழு

அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன் மாவட்டம் 250(S) சார்பில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள குளத்துப்பாளையம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன்250(S) பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.இந்த நிலையில், செப் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோவைப்புதூர் குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன்250(S) ஆசிரியர் தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன் மாவட்ட 250(S) தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தமிழ் ஆசிரியர் மீனாட்சி வரவேற்பு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில்,பள்ளி ஆசிரியர்கள் 30 பேருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அலையன்ஸ் பிரபாகரன்,

பள்ளியில் படித்து நாம் பல முன்னேற்றங்களை கண்டு எங்கு சென்றாலும் ஆசிரியர் தினத்தன்று பள்ளிக்கு வந்து நம்மை முன்னேற்றிய ஆசிரியர்களை கௌரவிக்க வேண்டும். இந்தப் பள்ளிக்கு தேவையான பல்வேறு பணிகளை அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன் முன்னெடுத்து செய்யும் என்றார்.

மேலும், நிகழ்சியில், அலையன்ஸ் முரளி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் முத்துக்குமார், ஆசிரியர்கள் ராஜா முகமது, கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க