• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தும் ‘ஆக்ஸிஸ் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஃபண்ட்’

January 7, 2022 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது, ஆக்சிஸ் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஃபண்ட் துவங்குவதாக அறிவித்துள்ளது.

என்எப்ஓ ஆனது ஜனவரி 7, 2022 அன்று சந்தாவிற்காகத் திறக்கப்பட்டு, ஜனவரி 21, 2022 அன்று முடிவடையும் என்றும் அறிவித்துள்ளது. புதிய நிதியை ஈக்விட்டியின் தலைவர் ஜினேஷ் கோபானி நிர்வகிப்பார். அதோடு, குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை 5,000 மற்றும் முதலீட்டாளர்கள் 1-,ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். கூடுதலாக, முதல் 50 இடங்களில் வரும் பெரும் நிறுவனங்களுக்குப் பிறகு, புதிய நிதி முதலீட்டாளர்களை பங்கேற்க அனுமதிக்கும்.

நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஆனது நிஃப்டி 50 இன்டெக்ஸ், 13 தனித்தனி தொழில்களில் பரவியுள்ள, நிஃப்டி 100 இன்டெக்ஸின் உட்கூறுகளை தவிர்த்து, 50 நிறுவனங்களின் செயல்திறனை அளவிட வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃப்ரீ-ஃப்ளோட் மார்க்கெட் கேபிடலைசேஷன் அடிப்படையில், நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஆனது, அடுத்த தலைமுறை சந்தைத் தலைவர்களை உருவாக்கும் நிறுவனங்களின் திறனை மேம்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதோடு, சமீபத்திய சூழ்நிலைகளின் பின்னணியில், பல நிறுவனங்கள் தங்களை மறுவடிவமைத்து,வலுவான நிதியளித்தல், மேலாண்மை வம்சாவளி, புதுப்பிக்கப்பட்ட அல்லது புதிய வணிக மாதிரிகள் போன்ற பல நடவடிக்கைகளின் பின்னணியில் வளர்ச்சி திறன்களை வெளிப்படுத்தியுள்ளன. மேலும், குறியீட்டு அரை ஆண்டு அடிப்படையில் மீண்டும் சமநிலைப்படுத்தப்படுகிறது, இதன் மூலம் அந்தந்த பரந்த துறைக்குள் புதிய வணிகங்கள் வெளிப்படுவதை உறுதி செய்கிறது. எனவே, நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் தீர்வுகளைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இந்த சிறந்த நிதி தேர்வாக இருக்கும்.

சந்தையுடன் இணைக்கப்பட்ட வருவாயில் கூடுதலாக, நிதியின் செயலற்ற தன்மையானது முதலீட்டாளர்களுக்கு வரவிருக்கும் புளூசிப் நிறுவனங்களில் பல்வகைப்படுத்தல் மற்றும் தரமான முதலீடுகளின் நன்மைகளை அனுமதிக்கிறது. தவிர, பெஞ்ச்மார்க் வருமானமானது முதலீட்டின் எளிமை மற்றும் பங்குத் தேர்வில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை தருவதால், இன்டெக்ஸ் நிதிகளானது, முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாகிறது. ஏனெனில் அவை பாதுகாப்புத் தேர்வின் அபாயத்தை நீக்கி, பரந்த சந்தை ஞானத்தை நம்பியுள்ளது ஹைலைட். மேலும், மியூச்சுவல் ஃபண்ட் கட்டமைப்பைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்கள் எஸ்ஐபி-கள், எஸ்டிபிகள் அண்டு லம்ப்சம் முதலீடுகள் போன்ற பல்வேறு முறையான விருப்பங்கள் மூலம் முதலீடு செய்யலாம்.

ஆக்ஸிஸ் ஏஎம்சி-யின் எம்டி மற்றும் சி,ஓ சந்திரேஷ் நிகம் பேசும்போது,

“ஆக்ஸிஸ் எஎம்சி ஆனது, நிலையான செயல்திறனை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட வலுவான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், எங்கள் நிறுவனத்தின் ‘பொறுப்பான முதலீடு’ என்ற தத்துவத்தை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். அதன்படி, ஆக்சிஸ் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஃபண்ட் ஆனது அடுத்த தலைமுறைத் தலைவர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு கைகொடுக்கும்.

அதுவும், செயலற்ற உத்திகளின் முக்கியத்துவத்தை முதலீட்டாளர்கள் புரிந்துகொண்ட சமயத்தில், சந்தையின் அளவுகோல் வருவாயை இது உறுதிசெய்கிறது. இந்த நிதியானது எங்கள் முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் வாய்ப்புகளை வழங்கும் கூடுதல் அம்சமாக ,ருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

மேலும் படிக்க