• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனது பூர்வீக சொத்தான 72 வீட்டு மனையை மீட்டுத் தருமாறு நெசவாளர் மனு

April 4, 2022 தண்டோரா குழு

கோவை துடியலூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனது பூர்வீக சொத்தான 72 வீட்டு மனையை மீட்டுத் தருமாறு நெசவாளர் ஜீவானந்தம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை துடியலூர் பகுதியில் 1963 ஆம் ஆண்டு தனது பாட்டிக்கு கொடுத்த 72 வீட்டு மனை தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜீவானந்தம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜீவானந்தம் நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த தங்களுக்கு வழங்கப்பட்ட 72 வீட்டு மனையை தற்போது புறம்போக்கு நிலம் என அறிவித்து அரசியல் குறுக்கீடு காரணமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டும் பலனளிக்காத நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் தங்களது வாழ்வாதாரம் காக்க இந்த இடத்தை மீட்டுத் தருவது மிகவும் அவசியமானது என்றும் ஜீவானந்தம் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க