July 4, 2019
வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர்தவிர இதர 38மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த, தேர்தல் பிரச்சாரத்தில்பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறையினர் துரைமுருகன் மற்றும் அவரது உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 11 கோடி அளவில் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைதேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நாள் : ஜூலை 11, 2019
வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூலை 18, 2019
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நாள்:ஜூலை 19, 2019
வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள்:ஜூலை 22, 2019
தேர்தல் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 5, 2019
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்: ஆகஸ்ட் 9, 2019