• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அவினாசி சாலையில் மேம்பாலப் பணி மின்விளக்குகள் அகற்றப்பட்டதால் மக்கள் அவதி

December 18, 2020 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதனிடையே பீளமேடு பகுதியில் உள்ள அவினாசி சாலையில் மேம்பாலப் பணிகள் முதல் கட்டமாக துவங்கி பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக சாலையின் நடுப்பகுதியில் உள்ள மின்விளக்குகள் அகற்றப்பட்டன. இதனால் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இப்பகுதியில் மின்விளக்குகளை அமைத்து தர வேண்டி பீளமேடு பகுதி ம.தி.மு.க செயலாளர் வெள்ளியங்கிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அம்மனுவில், மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்கில் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. மேம்பால பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் மின்விளக்குகள் அப்பகுதியில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

மேலும் படிக்க