• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அவினாசி சாலையில் மேம்பாலப் பணி மின்விளக்குகள் அகற்றப்பட்டதால் மக்கள் அவதி

December 18, 2020 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதனிடையே பீளமேடு பகுதியில் உள்ள அவினாசி சாலையில் மேம்பாலப் பணிகள் முதல் கட்டமாக துவங்கி பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக சாலையின் நடுப்பகுதியில் உள்ள மின்விளக்குகள் அகற்றப்பட்டன. இதனால் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இப்பகுதியில் மின்விளக்குகளை அமைத்து தர வேண்டி பீளமேடு பகுதி ம.தி.மு.க செயலாளர் வெள்ளியங்கிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அம்மனுவில், மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்கில் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. மேம்பால பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் மின்விளக்குகள் அப்பகுதியில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

மேலும் படிக்க