• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அழிந்து வரும் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க கோவை மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு

October 14, 2019 தண்டோரா குழு

அழிந்து வரும் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க கோவை மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் விவசாய உற்பத்தியில் மஞ்சள் விவசாயம் நாளடைவில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு குறைந்து கொண்டு வருகிறது. மஞ்சள் விவசாயம் மேட்டுப்பாளையம், அன்னூர், சத்தியமங்கலம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, சுல்தான்பேட்டை, சூலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் மேற்படி மஞ்சள் சாகுபடி ஆள் பற்றாக்குறை உற்பத்தி செலவு, தட்பவெப்ப சூழ்நிலை உற்பத்தி மகசூல் பாதிப்பு மற்றும் விலை பற்றாக்குறை போன்ற காரணங்களால் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.மஞ்சள் உற்பத்திக்கு விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல், நஷ்டம் ஏற்பட்டு வருவதால், மஞ்சள் சாகுபடி என்பது முற்றிலும் கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இக்கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி ஆராய்ந்து தக்க அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்து அழிந்து வரும் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க