February 29, 2020
அழகிய வீடுகளுக்கான கதவுகள் விற்பனை மையமான ‘ஜாஸ்ஸி’ என்னும் டோர்ஸ் ஷோரூம் 13 வருடங்களாக கோவை கணபதி பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் கோயமுத்தூர் வணிக தலைவர் அமர்நாத் கூறுகையில்,
எங்களுடைய நிறுவனத்தில் மக்களின் கனவு இல்லங்களுக்கு தேவையான கதவுகள், மாடுலர் கிட்சன், பர்னிச்சர், லைடிங்ஸ், வால் சீலிங், வால்பேப்பர் போன்ற பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருட்களை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கி வருகிறோம். குறிப்பாக கதவுகள் பல்வேறு வகையான டிசைன்களில வாசல்கால் மற்றும் கதவுகளை செய்து கொடுத்து வருகின்றோம். இதில் மெயின் டோர்கள் மற்றும் பாத்ரூம் டோர்கள் என தனித்தனியாக அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தரமான பொருட்களை வழங்கி வருகின்றோம். மெயின் டோர்கள் ரூபாய் 15,000 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வெயில் மற்றும் மழை காலங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் 15 வருடம் முதல் 20 வருடம் வரை வாரண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பாத்ரூம் போர்கள் அலுமினியம் மற்றும் கிளாஸ் போன்றவை மூலம் பல்வேறு டிசைன்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இதில் தண்ணீரில் துருப்புகள் மற்றும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும் வகையில் தரமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இன்டீரியர் பில்டர் ஆர்கிடெக்ட் மூலம் மாடுலர் கிச்சன் ஃபர்னிச்சர், லைட்டிங், சீலீங் போன்ற பல்வேறு வகையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தரமான பொருட்கள் வழங்குவதால் பொதுமக்கள் எங்கள் நிறுவனத்தை மீது வைக்கும் நம்பிக்கையின் மூலம் தொடர்ந்து இன்றுவரை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறோம் என்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.