• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ!

August 22, 2017 தண்டோரா குழு

காது,மூக்கு, தொண்டை, குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யும் ரோபோவை இங்கிலாந்து விஞ்ஞானிகள் அறிமுகம் செய்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில், ‘ரோபோ’ என்னும் இயந்திர மனிதன், அனைத்து துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ரோபோக்கள் மனிதர்களின் கடினமான வேலைகளை எளிதில் செய்து விடுகிறது.

தற்போது, அறுவை சிகிச்சை செய்யும் வகையில் ‘எவர்சியஸ்’ என்னும் ஒரு புதிய ரோபோவை, இங்கிலாந்தைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மனித உருவில் தயாரிக்கப்பட்ட ‘எவர்சியஸ்’ ரோபோ காது, மூக்கு, தொண்டை மற்றும் குடலிறக்கம் ஆகிய நோய்கள் சம்பந்தமான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கும் திறனுடையது.

“அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்த ரோபோவை வாங்க வேண்டுமானால்,சுமார் 2.5 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. அதேபோல, ரோபோவை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் 3,800 டாலர் அதிகமாக வசூலிக்க வேண்டியுள்ளது” என்று கேம்பிரிட்ஜ் மெடிக்கல் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க