• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரிசி ராஜாவை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்

November 14, 2019

பொள்ளாச்சி அருகே முகாமிட்டிருந்த ஒற்றை யானை அரிசி ராஜாவை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை அரிசி ராஜா இதுவரை 8 பேரை தாக்கிக் கொன்றுள்ளது.
அத்துடன் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் வீடுகளையும் சேதப்படுத்தி வந்தது. அரிசி ராஜாவைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை கும்கி யானையைக் கொண்டு பிடிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கும்கி யானை சலீமுடன் யானையைப் பிடிக்கும் பணியில் இறங்கினர்.
அர்த்தநாரிப்பாளையம் சுற்றுவட்டார வனப்பகுதிக்குள் பல்வேறு திசைகளில் பிரிந்து 3 நாட்கள் இரவு பகலாக காத்திருந்தனர். இதையடுத்து பருத்தியூர் வனப்பகுதி அருகே வனத்துறையினரிடம் சிக்கிய அரிசி ராஜா மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
அரை மயக்கத்தில் இருந்த அரிசி ராஜா, கும்கி யானை சலீமுடன் வர மறுத்து முரண்டுபிடித்தது. ஆனால், கும்கி யானை சலீம் அதனை விடாமல் முட்டி சமதளத்துக்கு இழுத்து, பெரும் போராட்டத்துக்குப் பின் லாரியில் ஏற்றப்பட்டது.

மேலும் படிக்க