• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன்னை அரபு நாட்டுக்கு அரசராக அறிவித்த இந்தியர்

November 15, 2017 தண்டோரா குழு

சூடான் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே உள்ள பகுதிக்கு இந்தியாவை சேர்ந்த ஒருவர் தன்னை அரசனாக அறிவித்துள்ளார்.

எகிப்து எல்லையின் தென் பகுதிக்கும் சூடான் நாட்டின் வடக்கு பகுதிக்கும் இடையே‘பிர் தவில்’ என்ற வறண்ட பாலைவனப்பகுதி உள்ளது. இதுவரை அந்த பாலைவனப்பகுதியை யாரும் உரிமை கோரவில்லை.இந்நிலையில் இந்திய நாட்டை சேர்ந்த சுயாஷ் திக்‌ஷித் என்பவர் அந்த நிலத்திற்கு தன்னையே அரசனாக அறிவித்துள்ளார்.

எகிப்து ராணுவத்தின் அனுமதியுடன் இந்த பகுதிக்கு வந்துள்ள திக்‌ஷித், அங்கு விதைகளை விதைத்து அதற்கு தண்ணீரும் ஊற்றியுள்ளார். ஏற்கனவே சிலர் இப்பகுதிக்கு சொந்தம் கொண்டாடியுள்ளனர். இருப்பினும் தற்போது நான் தான் இப்பகுதிக்கு அரசன். உங்களுக்கு வேண்டுமென்றால் போரிட்டு எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.மேலும் தன்னுடைய ராஜ்யத்திற்கு ‘தி கிங்டம் ஆப் திக்க்ஷிட்’ என்று பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க