• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு முதன்மை கல்வி அலுவலரை மிரட்டியதால் ஏராளமான போலீசார் குவிப்பு

January 11, 2021 தண்டோரா குழு

கோவையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகுந்த 100க்கும் மேற்பட்டோர் அலுவலரை மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை டவுன்ஹால் பகுதியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு திடீரென வந்த 100க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்குள் புகுந்து அலுவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை அலுவலர் உஷா கூறுகையில்,

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தியாகி என்.ஜி ராமசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவன் மீது பள்ளி கட்டணம் வசூல் செய்து பல லட்சம் மோசடி செய்ததாக குறித்து புகார் அளிக்க பட்டதாகவும், அந்த புகார் மீது தனி அலுவலர் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார் .மேலும் இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் வந்து வாக்கு வாதம் செய்து மிரட்டியதாக கூறினார்.

இதனால் இந்த அலுவலகத்திற்கும், அலுவலக ஊழியருக்கும், தனக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அரசு கல்வி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க