• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு முதன்மை கல்வி அலுவலரை மிரட்டியதால் ஏராளமான போலீசார் குவிப்பு

January 11, 2021 தண்டோரா குழு

கோவையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகுந்த 100க்கும் மேற்பட்டோர் அலுவலரை மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை டவுன்ஹால் பகுதியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு திடீரென வந்த 100க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்குள் புகுந்து அலுவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை அலுவலர் உஷா கூறுகையில்,

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தியாகி என்.ஜி ராமசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவன் மீது பள்ளி கட்டணம் வசூல் செய்து பல லட்சம் மோசடி செய்ததாக குறித்து புகார் அளிக்க பட்டதாகவும், அந்த புகார் மீது தனி அலுவலர் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார் .மேலும் இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் வந்து வாக்கு வாதம் செய்து மிரட்டியதாக கூறினார்.

இதனால் இந்த அலுவலகத்திற்கும், அலுவலக ஊழியருக்கும், தனக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அரசு கல்வி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க