May 20, 2019
தண்டோரா குழு
அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தூக்கியெறியப்பட்ட குழந்தை தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனை பின்புறம் கடந்த வியாழக்கிழமை இரவு பிறந்து 7 நாட்களான ஆண் குழந்தையை கட்டப்பையுடன் தூக்கி வீசி சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் குழந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் குழந்தையை தனியார் காப்பகத்திற்கு (லைப் லைன்) ஒப்படைத்தனர். மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரி முன்னிலையில் அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி செளந்தரவேல் ஒப்படைத்தார். ஆண் குழந்தைக்கு அர்ஜூன் என பெயர்சூட்டி மகிழ்ந்தனர்.