• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு மருத்துவமனையில் பி.ஆர்.நடராஜன் எம்பி ஆய்வு

May 5, 2021 தண்டோரா குழு

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஐன் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் குறித்து கடந்த செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து புதனன்று கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ஆகியோரை சந்தித்து மருத்துவமனைகளின் தற்போதைய நிலவரம் மற்றும் ஆக்சிஜனுக்கான தேவை இதர மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க