• Download mobile app
12 Aug 2026, WednesdayEdition - 3836
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பேருந்தும் ,லாரியும் நேருக்கு நேர் மோதல் 8 பேர் உயிரிழப்பு.

March 14, 2016 வெங்கி சதீஷ்

பொள்ளாச்சி திருப்பூர் ரோட்டில் அரசு பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதல் – 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு -சாலை ஓரம் கிணறு தோண்டும் இயந்திரத்தால் ஏற்பட்ட புகை மூட்டமே விபத்துக்கு காரணம் என தகவல்.

பொள்ளாச்சியில் இருந்து தென்னை நார் ஏற்றி கொண்டு திருப்பூர் சென்ற லாரியும் திருப்பூரில் இருந்து 43 பயணிகளை ஏற்றி வந்த அரசுப்பேருந்தும் கருமாபுரம் பிரிவு அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

மோதல் காரணமாக அங்கு பலத்த சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை காவல்துறையினர் மீட்டனர்.

ஆனால் பேருந்தில் இருந்த 4 வயது மற்றும் 7 ஏழு மாத குழங்தைகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பின்னர் பலத்த காயமடைந்த மற்ற பயணிகள் மற்றும் லாரி ஓட்டுனரையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் லாரி ஓட்டுனர் உள்ளிட்ட மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த மற்ற பயணிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து நெகமம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

கருமாபுரம் பிரிவில் சாலை ஓரம் கிணறு தோண்டும் இயந்திரத்தினால் ஏற்பட்ட புகை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காலவல்துறையின் முதல்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க